என்னைப் போல்
விழித்தே இருக்கிறது
இந்த இரவும்
மின்விசிறிகளும்
விளக்கும்
கூட
உறங்கவில்லை
தெரு விளக்குகள்
நின்றபடி
விழித்திருக்கிறது
காற்று
இந்நேரம்
கூட
அலைந்து கொண்டே
இருக்கிறது
என்னைப் போல்
விழித்திருக்கும்
நாய்கள்
குரைக்கும் வரை
இந்த இரவும்
அழகுதான்.