இந்த நொடி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3wx3jJjcq-y36ecfARQiM5oQUfKq61CvwfhYWTldl6pduyji6lD8KbqBU4OpedlSuOBSHB-nJhluPtai6DnhFIHAgPJEEWSj4r7r81BED-hcYAIejZZN-BoCO2_9id5DMly2XGFxfztSo/s400/kiru.jpg)
போகிறது
கடந்த நொடியை போல
எதிர் வரும்
நொடியும்
கூட
உடைந்தே போகும்
இல்லாத காலம்
இருந்து கொண்டே
இருக்கிறது
எப்போதும்...
-புதிய பேனா
வாங்கியதற்காக
கிறுக்கிப் பார்த்ததில்
எங்கிருந்து
எப்படி வந்தன
இந்த வரிகள் எல்லாம்
இந்த நொடியும்
உடைந்து கொண்டே போகிறது
வேறோர் கேள்வியுடன்..
இத்தனை நாள்
இவ்வரிகள் எல்லாம்
இப்பேனா மையில்
மறைந்து இருந்தனவா ?
மறைந்திருந்த வரிகளை கண்டுபிடித்த பேனா ! வரிகளை மட்டுமல்ல ஒரு கவிஞனையும் அடையாளம் காட்டி விட்டது....படித்து மகிழ்ந்தேன்....வாழ்த்துக்கள் கவி ஓல்டுமாங்க் !
ReplyDeleteஇன்னும் வெளி வராத முகங்கள் எத்தனையோ கண்டு பிடித்த பேனாவிற்கு நன்றி
ReplyDelete