Monday, January 9, 2012

காலக் கிறுக்கல்




இந்த நொடி
உடைந்து கொண்டே
போகிறது
கடந்த நொடியை போல

எதிர் வரும்
நொடியும்
கூட
உடைந்தே போகும்

இல்லாத காலம்
இருந்து கொண்டே
இருக்கிறது
எப்போதும்...

-புதிய பேனா
 வாங்கியதற்காக
 கிறுக்கிப் பார்த்ததில்
 எங்கிருந்து
 எப்படி வந்தன
 இந்த வரிகள் எல்லாம்

இந்த நொடியும்
உடைந்து கொண்டே போகிறது
வேறோர் கேள்வியுடன்..

இத்தனை நாள்
இவ்வரிகள் எல்லாம்
இப்பேனா மையில்
மறைந்து இருந்தனவா ?




2 comments:

  1. மறைந்திருந்த வரிகளை கண்டுபிடித்த பேனா ! வரிகளை மட்டுமல்ல ஒரு கவிஞனையும் அடையாளம் காட்டி விட்டது....படித்து மகிழ்ந்தேன்....வாழ்த்துக்கள் கவி ஓல்டுமாங்க் !

    ReplyDelete
  2. இன்னும் வெளி வராத முகங்கள் எத்தனையோ கண்டு பிடித்த பேனாவிற்கு நன்றி

    ReplyDelete